சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஃபார்முக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image
ரோஹித் சர்மா - படம் | ஐபிஎல்
Updated On :18 மே 2024, 12:38 pm

DIN

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஃபார்முக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஃபார்முக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மாவிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. இருப்பினும், உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருக்க, ரோஹித்தின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு தேவைப்படுவதும் இதுபோன்ற ஆட்டமே. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தால், பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுப்பார்கள். தொடக்கம் சிறப்பாக அமைந்தால் இந்திய அணியால் 200 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்ய இயலும் என்றார்.

டி20 உலகக் கோப்பையில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.