15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக ரூ. 840 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை இன்று(ஆக. 17) பவுனுக்கு ரூ.860 உயர்ந்து ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஆகஸ்ட் 2024, 5:17 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை இன்று(ஆக. 17) பவுனுக்கு ரூ.860 உயர்ந்து ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைப்பு காரணமாக அதன் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக சா்வதேச காரணிகளால் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை(ஆக.17) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ. 53,560-க்கும், கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ரூ. 6,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.91-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2000 உயர்ந்து ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது.

ஆவணி மாதம் முதல் நாளிலே தங்கம் விலை உயர்ந்துள்ள வருவது திருமண நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.