இந்நிலையில், மாநில முதல்வரையே பொதுவெளியில் வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு துணிந்து விட்டவரான ஆசிரியையின் திறனை எண்ணி வியந்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தும் சேனல் தரப்பிலிருந்து தங்களது போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி ஆசிரியைக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இது குறித்துப் பேசுகையில் ஆசிரியை உத்தரா, ‘தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்ததாகவும், ஆனால், தனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை எனக்கூறி தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ‘ என் வாழ்க்கையை நான் அமைதியான முறையில் சிரமமின்றி நடத்திச் செல்ல ஆசைப்படுகிறேனே தவிர, பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமாகி பணம் சம்பாதிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லையென்றும், தன்னுடைய ஆசிரியப் பணி மூலம் கிடைக்கும் பணத்தில் தனது குடும்ப காரியங்களை நடத்திச் செல்லவே தான் விரும்புவதால் அதற்கு அரசு தரப்பிலிருந்து தன்னுடைய பணியிட மாறுதலுக்கு உத்தரவிட்டால் அது மட்டுமே தனக்கு திருப்தி கிடைக்கச் செய்யும் மாற்றமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.