/

இந்தியாவால் உலக அமைதியை ஏற்படுத்த முடியம்: பிரதமர் நரேந்திர மோடி

இன்றைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜூலை 2018, 3:12 pm

இன்றைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அந்நிய தேசங்களில் இந்தியாவின் நிலை குறித்த 9-ஆவது மாநாடு புதுதில்லியில் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர்கள் எம்.ஜே.அக்பர், வி.கே.சிங் ஆகியோர் திங்கள்கிழமை கலந்துகொண்டனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தற்போதைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும். இதில் இந்தியாவால் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.

மேலும், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.