பரப்பன அக்ரஹாரா சிறையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு, அவர் ஒரு ஊழல் குற்றவாளி என்பதைப் புறம் தள்ளி சிறைத்துறை டிஜிபி எச்.என்.சத்யநாராயணா 2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சசிகலாவுக்கு தனி சமையலறை, சிறைக்காவலர் ஒருவரின் உதவி உட்பட சில சிறப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளார் என அப்போது பரப்பன அக்ரஹார சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தனது உயரதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். தனது புகாருக்கு ஆதாரமாகச் சில சான்றுகளையும், தெளிவான விளக்கங்களையும் கூட ரூபா தனது உயரதிகாரிகளுக்கு அனுப்பி இருந்ததாக அவரே அப்போதைய தனது நேர்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.