‘சென்னைட்டிஸ்’ எனும் முகநூல் பக்கத்தில், சென்னையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை பழுதாகியுள்ளது... அதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது, எனும் பதிவை புகைப்படத்துடன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அதைக் கண்ட சென்னையைச் சேர்ந்த அரவிந்தன் ஐபிஎஸ் எனும் காவல்துறை அதிகாரி உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தச் சாலையை சரி செய்துள்ளார். அதுமட்டுமல்ல முகநூலில் சாலைப்பழுது புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்த நபருக்கும் உடனடியாக தொடர்பு கொண்டு சாலை சரி செய்யப்பட்ட விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் நலப் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்களே நடவடிக்கை எடுக்காமலிருக்கும் இன்றைய நாட்களில், தனது துறை சார்ந்த விஷயம் இல்லையென்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களை அந்தப் பகுதி மக்கள் மனதாரப் பாராட்டினர்.
சென்னை தி.நகர் காவல் துணை ஆணையராக தற்போது அரவிந்தன் பணியாற்றி வருகிறார். தனது அலுவல் மட்டுமல்ல அதைத் தாண்டி அரவிந்தன் ஐபிஎஸ் சமூகப் பொறுப்புள்ள பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்துவதில் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்படுகிறார். கடந்த 18 ஆம் தேதி சென்னையிலுள்ள பின் தங்கிய மாணவர்களை அழைத்து அவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். “ஒரு சிறு வழிகாட்டுதல் இருந்தால் போதும், இவர்கள் தங்களது கனவை அடைந்து விடுவார்கள். இவர்களை மேம்படுத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என அரவிந்தன் ஐபிஎஸ் அந்நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் பற்றிய எதிர்மறைச் செய்திகளே இதுவரை ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதே காவல்துறையில் அரவிந்தனைப் போன்று சமூகப் பொறுப்புள்ள நல்லிதயம் கொண்ட அதிகாரிகளும் பணியாற்றி வருகிறார்கள் என்பது பொதுமக்களிடையே அரிதான விஷயமாகக் கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


