அவரைப் போன்றவர்கள் மட்டுமல்ல, இங்கே நாம் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆட்டு மந்தைகள் போலப் பின்பற்றுகிறோமே அத்தகைய மாட்சிமை பொருந்திய அரசியல் தலைவர்களின் நிலையும் கூட இந்தியாவையும், அதன் இறையாமையையும் புரிந்து கொள்ளும் விசயத்தில் மிக மிக மோசமான ஒரு நிலையில் தான் இருக்கிறது. அவர்களுக்கும் இந்தியாவைப் பற்றிய அடிப்படைப் புரிதல் என எதுவுமே இல்லை. மாநில அரசியல் தலைவர்களை விட்டுத் தள்ளுங்கள், தேசிய அளவில் பெரியகட்சிகளை நிர்வகிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தேசியத் தலைமைகளின் நிலையே நிறவெறி, இனவெறி விசயத்தைப் பொறுத்த வரை இப்படித்தான் எனில், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி பேசி என்ன பயன்?