டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகலாம்: சீரம் நிறுவனம்

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா (கோப்புப்படம்)

Updated On :18 மே 2021, 1:53 pm

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் தொற்று குறைவாக இருந்தபோது தான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுக்கே முன்னிரிமை அளிக்கப்படுகிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட  இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். 2 - 3 மாதங்களில் தடுப்பூசி போடுவது என்பது இயலாத காரியம்.

கரோனா தடுப்பூசி போடுவதில் நிறைய சவால்கள் உள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.