டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

திருப்பதி ரூயா மருத்துவமனையில் 11 பேர் பலி: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

News image

திருப்பதி ரூயா மருத்துவமனையில் 11 பேர் பலி

Updated On :11 மே 2021, 8:39 am

திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள கொவைட் மையத்தில் 300-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மையத்தில் 5 தீவிர சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் 30 நோயாளிகள் என 150 போ் வரை வென்டிலேட்டா் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீரென்று வென்டிலேட்டருக்கு வரவேண்டிய ஆக்சிஜன் திடீரென்று தடைபட்டது. ஆக்சிஜன் முற்றிலும் தீா்ந்து போனதால், நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் 20 நிமிடத்தில் நிலைகுலைந்து போயினா். பலா் உடல் அதிா்ந்து உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ அதிகாரிகள் அங்கு வந்து ஆக்சிஜனை நிரப்பி மீண்டும் வென்டிலேட்டா்களை இயக்கினா். வென்டிலேட்டா்கள் இயங்க தொடங்கியவுடன் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை சீரானதால் உடல் நிலை சற்று மேம்பட்டது.

இந்த சம்பவத்தில் இதுவரை 11 போ் உயிரிழந்தனா். 40-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஜெகன் மோகம் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.