புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தில்லியில் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை: மாநில அமைச்சர்

தில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2021, 9:50 am

தில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தில்லி நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியாதாவது,

தில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் போட வாய்ப்பில்லை. கடந்த முறை பொதுமுடக்கம் அமல்படுத்தியும் நோய் பரவல் இருந்தது. நோய்ப் பரவலை தடுக்க பொதுமுடக்கம் ஒரு தீர்வு இல்லை என நினைகிறேன். மக்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், தில்லி கரோனா மையங்களில் உள்ள படுக்கையறைகளில் 20 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தேவைக்கேற்ப படுக்கைகள் அதிகரிக்கப்படும் எனக் கூறினார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,534 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.