சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

‘பாஜக தலைவர் போல மேற்கு வங்க ஆளுநர் செயல்படுகிறார்’: திரிணமூல் பொதுச்செயலாளர்

மேற்கு வங்க ஆளுநர் பாஜகவின் மாநில தலைவர் போல் செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:25 am

ANI

மேற்கு வங்க ஆளுநர் பாஜகவின் மாநில தலைவர் போல் செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு திரிணமூலில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த பலர் மீண்டும் திரிணமூலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கார் நியமிக்கப்பட்டதில் இருந்தே திரிணமூல் காங்கிரஸ் அரசுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த குணால் கோஷ் கூறியதாவது,

ஆளுநர் ஒரு பாஜக உறுப்பினரைப் போல செயல்பட்டு, மாநில அரசை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார். பாஜக செய்யும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டார். அவர்கள் மக்களின் முடிவை ஏற்கவில்லை. சட்டப்பிரிவு 355 அல்லது 356-ஐ பயன்படுத்தி ஊடுருவ முயற்சி செய்கிறார்கள்.

ஆளுநர், பாஜகவின் மாநில செயல் தலைவர் போலவும், ராஜ் பவன் பாஜக அலுவலகமாகவும் மாறிவிட்டது. ஆளுநரின் வேலை குறித்து மம்தா பானர்ஜி ஏற்கனவே பிரதமருக்கு இரண்டு, மூன்று கடிதங்களை எழுதியுள்ளார்.

மேலும், திரிணமூலில் இருந்து பாஜகவில் இணைந்த தலைவர்கள், பாஜகவில் தொடர்ந்து செயல்பட விரும்பவில்லை. குறைந்தது, பாஜகவின் 8 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் திரிணமூலில் தொடர்பில் உள்ளார்கள். அவர்கள் குறித்த இறுதி முடிவை மம்தா எடுப்பார் எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.