ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

377 மாவட்டங்களின் பாதிப்பு விகிதம் 5 சதவீதம்: மத்திய அரசு

நாட்டில் உள்ள 377 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 11:11 am

நாட்டில் உள்ள 377 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலால் பாதிப்பின் புதிய உச்சம் தொட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் படிப்படியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில்,

கடந்த மே 7ஆம் தேதி தரவை ஒப்பிடும் போது, தினசரி பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பதிவாகும் மொத்த பாதிப்பில் 66 சதவீதம் 5 மாநிலங்களிலிருந்து பதிவு செய்யப்படுகிறது.  

377 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 

மொத்தம் 257 மாவட்டங்களில் நாள்தோறும் 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

நாட்டில் மொத்தம் 17.2 கோடி பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளோம்.

45 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீத மக்கள் குறைந்தது முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.