பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குடியரசு தின விழாவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைப்பு: தில்லி காவல்துறை

தில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை பார்வையிட வருவோர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

News image
குடியரசு தின விழா அணிவகுப்பிற்கு ஒத்திகையில் வீரர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 7:20 pm

ANI

தில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை பார்வையிட வருவோர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினவிழா, தில்லி செங்கோட்டையில் கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். 

இந்நிலையில் நிகழ்வாண்டு கரோனா பரவல் காரணமாக பல்வேறு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.

இதுகுறித்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் கூறியதாவது,

கரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் வீரர்களின் அணிவகுப்பு பாதையின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் அழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நுழைவாயில்களில் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்படும்.  மேலும் விழாவிற்கு வருவோர் அழைப்பிதழ் இல்லாமல் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.