/

தில்லியில் 44 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள்: முதல்வர்

தில்லியில் புதிதாக 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Updated On :27 ஏப்ரல் 2021, 8:55 am

தில்லியில் புதிதாக 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் தில்லியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல மாநிலங்களிலிருந்து தில்லிக்கு ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தில்லி முதல்வர் இன்று பேசியதாவது,

தில்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளோம். அதில் மத்திய அரசு 8 நிலையங்களும், மாநில அரசு 36 நிலையங்களும் உருவாக்க உள்ளது. 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்களை பிரான்ஸ் நாட்டிலிருந்தும், 15 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் இந்தியா கம்பெனிகளிடம் வாங்கப்படவுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ள 21 உபகரணங்கள் உடனடியாக தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நிறுவப்படவுள்ளது. அதன்மூலம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க முடியும்.

18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் பேங்காங் நாட்டிலிருந்து நாளை வருகின்றது. அதை கொண்டுவர விமானப்படை விமானங்களை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.