ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கேரளத்தில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்

கேரளத்தில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

News image

கேரள முதல்வர் பினராயி விஜயன்

Updated On :27 அக்டோபர் 2020, 11:17 am

கேரளத்தில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன்,

இந்த குறைந்தபட்ச விலை, உற்பத்தி விலையைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை சரிந்தாலும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையிலேயே கொள்முதல் செய்யப்படும்.

இதன்மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த நாட்டின் முதல் மாநிலமாக கேரளம் உள்ளது.

நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விநியோகிப்பதை ஒருங்கிணைப்பார்கள்.

குறைந்தபட்ச விலையின் பயனைப் பெறுவதற்காக பயிர் காப்பீடு செய்த பின்னர் விவசாயிகள் விவசாயத் துறையின் பதிவு தளத்தில் பதிவு செய்யலாம். குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற முழு விநியோகச் சங்கிலி செயல்முறைகளையும் அமைக்க இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது" என்று விஜயன் மேலும் கூறினார்.

பல ஆண்டுகளாக கேரளா அதன் காய்கறி தேவைகளுக்காக அண்டை மாநிலங்களை மட்டுமே நம்பியுள்ளது மற்றும் சமீபத்திய காலங்களில் மாநிலத்தின் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்து 14.72 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம், இந்த ஆண்டு காய்கறிகள் மற்றும் கிழங்கு பயிர்கள் ஒவ்வொன்றும் கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.