பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி: முதல்வர்

பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க நேரம் அறிவித்து முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

News image
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

ANI

பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க நேரம் அறிவித்து முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

“தீபாவளி மற்றும் குருநானக் ஜெயந்தி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பட்டாசு வெடிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நவம்பர் 10 முதல் டிசம்பர் 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாளான நவம்பர் 14ஆம் தேதி இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், குருநானக் ஜெயந்தியான நவம்பர் 30ஆம் தேதி காலை 4 மணி முதல் காலை 5 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று, இரவு 11.55 மணி முதல் அதிகலை 12.30 மணி வரை வெடிக்கலாம்.” என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.