மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆந்திரம்: மச்சிலிபட்டினம் சட்டமன்ற தொகுதியில் முழு ஊரடங்கு

ஆந்திர மாநிலத்தில் உள்ள மச்சிலிபட்டினம் சட்டமன்ற பகுதியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மச்சிலம்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் முழு ஊரடங்கு

Updated On :30 ஜூலை 2020, 7:11 am

ஆந்திர மாநிலத்தில் உள்ள மச்சிலிபட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் மச்சிலிபட்டினம் சட்டமன்றப் பகுதியில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுபடுத்துவது குறித்து புதன்கிழமை போக்குவரத்து துறை அமைச்சரும் மச்சிலிபட்டினம் சட்டமன்ற உறுப்பினரும் ஆன பெர்னி வெங்கடராமையா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் முடிந்து வெங்கடராமையா ஊடகத்தினரிடம் கூறுகையில், 

கரோனா நம் பகுதியில் தீவிரமடைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் திங்கள் முதல் ஞாயிறு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

ஆகையால் மக்கள் கடைசி நேரத்தில் அவதி படாமல் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இப்பகுதியில் செயல்பட அனுமதிக்கப்படும். மற்ற அனைத்து கடைகளும் முற்றிலும் மூடப்படும்.

மருத்துவ அவசரநிலைகளைத் தவிர்த்து வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியேற கூடாது. மக்கள் வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

மேலும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் முகமூடி அணிவது கட்டாயம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.