மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

லூதியானாவில் சீன ராக்கிகள் புறக்கணிப்பு

லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் சீனப் படையினரால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து லூதியானாவில் உள்ள மக்கள் சீனப் பொருள்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

News image

லூதியானாவில் சீன ராக்கிகள் புறக்கணிப்பு

Updated On :24 ஜூலை 2020, 7:26 am

லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் சீனப் படையினரால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் சீனப் பொருள்கள் வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். தற்போது லூதியானாவில் உள்ள மக்கள் சீனப் பொருள்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

இதைப்பற்றி லூதியானாவில் உள்ள வியாபாரியான பவன் குமார் கூறுகையில்,  ”இந்த ஆண்டு ரக்‌ஷபந்தன் விழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் வருட வருடம் ராக்கி வாங்குவது வழக்கம்.

அதைப் போல் இந்த ஆண்டு ராக்கி வாங்க கடைகளுக்கு வரும் மக்கள் இது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருளா என கேட்கிறார்கள். நான் ஆம் என கூறினால் கடையை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

அதனால், தற்போது நான் இந்தியாவில் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட ராக்கிகளை மட்டுமே விற்கின்றேன். 

நம் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கிகள் சீனப் பொருட்களை விட இது மிகத் தரமாகவும், அழகாகவும் இருக்கின்றன. இது நம் நாட்டின் பொருளாதரத்திற்கு உதவுவதாகவும், கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும்” என பவன் குமார் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.