அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்: பாலிவுட் நடிகை, மாடல் அழகி கைது

மும்பையில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:27 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


மும்பையில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.  பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு புறநகரப் பகுதியான கோரேகாவ்ன் (கிழக்கு) பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சிலரை போலி வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை ஆணையர் டாக்டர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீஸார் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 2 சிறுமிகளை மீட்டனர்.

பாலியல் தொழிலுக்கு சிறுமிகைளை சப்ளை செய்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்திய தண்டனையியல் சட்டம் (ஐபிசி) 370 (3) மற்றும் 34 பிரிவுகளின் கீழும், ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் 4 மற்றும் 5 பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இதேபோன்று  ஜுஹுவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பத்து அழகிகளை போலீஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டுள்ள நடிகை அம்ரிதா,பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் தொழில் விவகாரத்தில் பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.