2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கிம் ஜோங் உன்னை சந்திக்க வடகொரியா வந்தடைந்தார் மூன் ஜே இன்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:48 pm

ANI


சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங் வந்தடைந்தார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றவாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக,  சியோல் விமான நிலையத்திலிருந்து காலை 8.40 மணியளவில் அதிபர் மூன் ஜே இன் தனி விமானம் புறப்பட்டு, பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9.50 மணியளவில் வந்தடைந்தார். தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை, வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு அளித்தார். விமானநிலையத்தில் கூடியிருந்த வட கொரியா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங்-உன்னுடன் நடைபெற்றது. 

அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், தனது மனைவி மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட 110 உயர்மட்ட குழுவினருடன் வடகொரியா வந்துள்ளார். 

இரு நாட்டு தலைவர்களின் மூன்று நாட்கள் சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இவர்களின் சந்திப்பு அமையும் இருக்கும் என்றும் அணு ஆயுதங்களைக் கைவிடும் வட கொரியாவின் நடவடிக்கைகளை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வது, அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆகிவை குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவர்களின் பேச்சுவார்த்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.