2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தோல்வியை மறைப்பதற்காக திசைதிருப்பும் உத்தியைக் கையாள்கிறது பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு

மத்தியிலும் மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ள பாஜக அரசுகள், அதை மறைப்பதற்காக பல்வேறு திசைதிருப்பும் உத்திகளைக்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:47 pm

ANI


லக்னோ: மத்தியிலும் மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ள பாஜக அரசுகள், அதை மறைப்பதற்காக பல்வேறு திசைதிருப்பும் உத்திகளைக் கையாள்வதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு பாஜக அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.

மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக அரசுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அதை மறைப்பதற்காக மக்களைத் திசைதிருப்பும் உத்திகளைக் கையாள்வதாகவும், வாஜ்பாயின் மறைவை அரசியல் ஆதாயம் பெறப்பயன்படுத்த பாஜக முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவுக்கு பாஜக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குஜராத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு கும்பல் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பின்தங்கிய பிரிவினர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றார். 

மேலும், எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம். எங்களுக்கு தேர்தலில் மரியாதையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். ஒருவேளை மரியாதையான தொகுதிகள் வழங்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்று மாயாவதி கூறினார். 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மாயாவதியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.