சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனை: ரூ.4.52 கோடி பறிமுதல்

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.52 கோடி பணமும், பல கோடி

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:00 pm

ANI


பெங்களூரு: கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.52 கோடி பணமும், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அரசு அதிகாரிகள் சொத்துகள் குவித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இதில், ரூ.4.52 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள், ரொக்கப் பணம், தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

என்.ஜி.கெளடய்யா, டி.ஆர்.சுவாமி ஆகியோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சந்திரசேகர் கூறுகையில், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனை நடத்தினர். 

இதில், டி.ஆர்.சுவாமியிடம் இருந்து ரூ.4.52 கோடி பணம், 3 கார்கள், 1.6 கிலோ தங்கம், 7.5 கிலோ வெள்ளி, 8 வீடுகள், 11 மனைகள் மற்றும் 14 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கெளடய்யாவிடம் இருந்து ரூ.77 லட்சம் பணம், வங்கி கணக்குகளில் சுமார் ரூ.30 லட்சம், 18.2 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, 3 கார்கள், 8 வீட்டு மனைகள், 2 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.