பெங்களூரு: கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.52 கோடி பணமும், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அரசு அதிகாரிகள் சொத்துகள் குவித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில், ரூ.4.52 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள், ரொக்கப் பணம், தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
என்.ஜி.கெளடய்யா, டி.ஆர்.சுவாமி ஆகியோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சந்திரசேகர் கூறுகையில், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
இதில், டி.ஆர்.சுவாமியிடம் இருந்து ரூ.4.52 கோடி பணம், 3 கார்கள், 1.6 கிலோ தங்கம், 7.5 கிலோ வெள்ளி, 8 வீடுகள், 11 மனைகள் மற்றும் 14 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கெளடய்யாவிடம் இருந்து ரூ.77 லட்சம் பணம், வங்கி கணக்குகளில் சுமார் ரூ.30 லட்சம், 18.2 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, 3 கார்கள், 8 வீட்டு மனைகள், 2 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


