புதுதில்லி: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்து வரும் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்ரகள் தாக்குதலை நிறுத்துங்கள் என கெஞ்சி வருகின்றர்.
காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று சர்வதேச எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் சரமாரியான பதிலடியை கொடுத்து உள்ளது. பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தாக்குதலை நிறுத்துக்கள் என கெஞ்சி உள்ளனர் என எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானின் நிலைகள் சிதைக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் படைக்கு பெரும் உயிரிழப்பும் நேரிட்டு உள்ளது.
சர்வதேச எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நிலைகள் சிதைப்பு உள்ளிட்ட காட்சிகள் அதில் அடங்கி உள்ளது.
கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் படைகள் எங்கெல்லாம் அத்துமீறியதோ அங்கெல்லாம் அவர்களுடைய நிலைகளை இந்திய ராணுவம் சிதைத்து உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு பிராந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் படை, எல்லையில் தாக்குதலை நிறுத்துக்கள் என மன்றாடியதாக எல்லைப் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக அத்துமீறி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது, அதற்கு பதிலடியாகதான் இப்போது தாக்குதல் எடுக்கப்பட்டு உள்ளது எனவும் எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜம்முவில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


