காத்மாண்டு: நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை புகழ்மிக்க முக்திநாத் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கடந்த 2014-இல் பிரதமராக பதவியேற்ற பிறகு நேபாளத்துக்கு 3-ஆவது முறையாக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை சென்றார்.
ஜனக்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஈஸ்வர் பொகாரல், ஜனக்பூர் மேயர் லால் கிஷ்ரோ ஷா உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.
பின்னர், ஹிந்துகளின் புனித நகரமாகவும், சீதை பிறந்த இடமாக அறியப்படும் ஜனக்பூர் நகரிலுள்ள ஜானகி கோயிலுக்கு சென்றார். அங்கு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று பிரதமர் மோடி ஜானகி கோயிலில் வழிபட்டார். அந்த நகரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வரலாற்றுரீதியிலான தொடர்புகளை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜனக்பூரையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் மேம்படுத்துவதற்கு இந்தியா சார்பில் ரூ.100 கோடி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தனது பேச்சை தொடங்கும்போது, நேபாளி, மைதிலி ஆகிய மொழிகளில் மோடி சில வார்த்தைகள் பேசியதுடன், 'ஜெய் சீதா ராம்' என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கரவொலிகளை எழுப்பினர்.
அதன்பின்னர் ஜனக்பூர்- உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி இடையே நேரடி பேருந்துச் சேவையை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியும் கூட்டாக தொடங்கிவைத்தனர். ராமாயண அடிப்படையிலான ஆன்மீக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் இன்று காலை புகழ்பெற்ற முக்திநாத் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். கோயிலில் அமர்ந்து சிறிது நேரம் வழிபட்டார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் மோடி சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். மோடியின் வருகையையொட்டி கோயில் வளாகத்தில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதன்பின்னர் காத்மாண்டு திரும்பும் மோடி, பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார். இதையடுத்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் பேச உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


