புதுதில்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்தியாவின் இருண்ட காலம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
1975-ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரை 21 மாதம் வரை நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நாளே ஜூன் 25. இதை குறிக்கும் வகையில், பிரமதர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 43 ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து உறுதியுடன் போராடிய பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தலைவணங்குவதாகக் கூறியுள்ளார்.
அவர்களது போராட்டம்தான் சர்வாதிகாரத்தை வென்று மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டியதாகவும், மனித உரிமைகளை காத்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நிறுவனங்கள் சீர்குலைக்கப்பட்டு, அச்சம் மிகுந்த சூழல் உருவாக்கப்பட்ட நெருக்கடி நிலையை இந்தியா இருண்ட காலமாக நினைவுகூர்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
நெருக்கடி நிலையின்போது மக்கள் மட்டுமின்றி கருத்துகளும், கலை-இலக்கிய சுதந்திரமும் கூட அதிகார அரசியலுக்கு கீழ்ப்படுத்தப்பட்டதாக மோடி குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மதிப்பீடுகளை வலிமையாக்குவதற்கு பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள மோடி, எழுதுவதும், விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் ஜனநாயகத்தின் முக்கியமான அம்சங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெருமை கொள்வோம் என்றும், நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை யாரும், எந்த சக்தியும் எப்போதும் நசுக்கிவிட முடியாது என்று அடுத்தடுத்து பதிவிட்டுள்ள பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார்.
மேலும், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்தியாவின் இருண்ட காலம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தியும், ஹிட்லரும் ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றியவர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

