தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலக சாதனை படைத்தது பாபா ராம்தேவ் தலைமையிலான 2 லட்சம் பேர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் உலக சாதனை படைத்துள்ளது. 

News image
Updated On :21 ஜூன் 2018, 6:34 am


கோட்டா:  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் உலக சாதனை படைத்துள்ளது. 

நான்காவது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் பல இடங்களில் இதற்காக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் நான்காவது சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  தில்லியில் பாஜக அமைச்சர்கள் யோகா பயிற்சி செய்தனர். அமைச்சர்கள் பியூஸ் கோயல், எம்எல்ஏ பங்கஜ் சிங் ஆகியோர் யோகா பயிற்சி செய்தனர். 

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியில் யோகா குரு பதஞ்சலி பாபா ராமதேவ் யோகா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் பாபா ராமதேவ் யோகா பயிற்சி செய்தார். பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் உலக சாதனை படைத்துள்ளது. ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட இந்த நிகழ்ச்சி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையிலேயே வழங்கப்பட்டது. . 

இது எங்களுக்கு பெருமை தருவதாக ராம்தேவ் கூறினார். யோகாவில் அதிகமானோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். யோகா, சூரிய நமஸ்காரர்கள், புஷ்-அப்ஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பிரிவுகளாகும் என்றார். 

விசாகப்பட்டினத்தில் கப்பல் தளத்தில் கப்பல் துறையில் பணிசெய்வோர் யோகாவில் ஈடுபட்டனர். கொச்சியில் ஐ.என்.எஸ் ஜமுனா கப்பலில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.