தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சியா?: மோடி கேள்வி

காங்கிரஸ் கட்சி முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது முஸ்லீம் பெண்களுக்குமா என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:13 pm

ANI

லக்னோ: காங்கிரஸ் கட்சி முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது முஸ்லீம் பெண்களுக்குமா என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

உத்தரபிரததேசத்தில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா அல்லது முஸ்லீம் பெண்களுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.  

23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலை திட்டத்தால் நொய்டா போன்ற மாநிலத்தில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், பரபங்கி, அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை தலைநகர் லக்னோவுடன் இணைக்கும் விதத்தில் அமைக்கப்படுகிறது. 

இந்த விரைவுசாலை மூலம் காய்கறிகள், பழங்கள் பால் உள்ளிட்டவற்றை குறைந்த நேரத்தில் தலைநகர் தில்லி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்ல முடியும் என்றார்.

பூர்வாஞ்சல் சாலை திட்டத்தால் கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகள் வளர்ச்சியடையும். நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கிராம மக்களின் அடையாளமே மாறும் என்று பெருமிதத்துடன் கூறினார்.

கடந்த ஆட்சிக்காலங்களில் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டன; மக்கள் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுத்ததும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறத் தொடங்கியது. பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் உத்தரபிரதேசத்தை உன்னதமான உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார். 

முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் மற்றும் ஊழலை ஒழித்து முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு கொண்டு வருவதும், சிறிய வர்த்தகர்களுக்கு வியாபாரத்தை எளிதாக்குவதும் பாராட்டுக்குரியவை என்று மோடி தெரிவித்தார். 

மேலும், பரம்பரை அரசியலில் ஈடுபடும் கட்சிகள் முஸ்லீம் பெண்கள் துயரப்படும் வகையில் முத்தலாக் முறை தொடர வேண்டும் என்று விரும்புவதாக குற்றம்சாட்டிய மோடி, முத்தலாக் முறைக்கு எதிராக அரசு போராடும். முத்தலாக் தடை சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுப்பதாக குற்றம்சாட்டினார் 

அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக, பின்தங்கிய வகுப்புகளின் வளர்ச்சியை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது. தலித்துகள், ஏழைகளும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வலுவடைந்திருந்தால், அவர்களுடைய 'வியாபாரம்' முடக்கப்படும் என்றார்.  

காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என அதன் தலைவர் பேசியதாக செய்தித்தாள்களில் படித்தேன், காங்கிரஸ் ஆண் முஸ்லிம்களுக்கானதா? அல்லது பெண் முஸ்லிம்களுக்கும் சேர்த்துதானா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், முன்பு ஒருவரையொருவர் பார்க்க கூட விரும்பாமல் கண் பார்வையற்ரவர்களாக இருந்தவர்கள் எல்லாம் தற்போது இரவும் பகலும் ஒன்றிணைந்து தமக்கு எதிராக குரல் எழுப்புவதாகவும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.