அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

காற்று மாசுபாட்டால் தலைநகர் தில்லியில் 15 ஆயிரம் பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தலைநகர் தில்லியில் 2016-ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், அசுத்தமான காற்றால்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:13 pm

PTI

புதுதில்லி: தலைநகர் தில்லியில் 2016-ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் தில்லி 3வது இடத்தை பிடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஐஐடி (மும்பை) ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவில், உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் தலைநகர் தில்லி 3வது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. காற்றில் கலந்துள்ள நச்சு துகள்களால் தில்லியில் மட்டும் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நச்சு கலந்த நுண் துகள்களை சுவாசிக்கும்போது அவை நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் இருதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல். புற்றுநோய், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு சுகாதர விளைவுகள் தொடர்புடைய நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வு பட்டியலின் படி,  பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. 2016-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் 18 ஆயிரத்து 200 பேரும், ஷாங்காய் 17 ஆயிரத்து 600 பேரும் உயிரிழந்ததாகவும், பாகிஸ்தானின் கராச்சியில் 7 ஆயிரத்து 700 பேரும், மும்பையில் 10 ஆயிரத்து 400 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும், பெங்களூரு மற்றும் சென்னையில் மொத்தம் 4 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியின்படி ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும்,  காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு பிராந்திய முயற்சிகளையும், நிரந்தரமான காற்று தர இலக்குகளை அமைப்பதற்கான தேவையையும் இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

காற்று மாசுபாடு மக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், அதனை வெற்றிக்கொள்ளும் விதமாக மாசுபாட்டை தவிர்ப்பதற்கான ஒரு வலுவான திட்டத்தினை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.