புதுதில்லி: கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் 54,723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், 40.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த விகிதம் 22.7 சதவீதம் ஆகும். கடந்த 2015-ஆம் ஆண்டில் 41,893 குழந்தைகளும், 2014-ஆம் ஆண்டில் 37,854 குழந்தைகளும் கடத்தப்பட்டு உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பார்க்கிறபோது, குழந்தைகள் கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துத்தான் வருகிறது, குறைந்தபாடில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 8,132 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 15,379 பேர் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,229 பேர் ஆண்கள், 10,150 பேர் பெண்கள். இதில் 23,117 பேரில், 10,347 ஆண்களும், 12,770 பெண்கள் என மொத்தம் 23,117 பேர் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிராக 1,06,958 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2015-ஆம் ஆண்டில் 94,172 ஆக மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் ஏறக்குறைய 13.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 24 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது.
இது 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குழந்தை கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதையே மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கிறது.
இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குழந்தை கடத்துதல் குறித்து சமூக ஊடகங்களில் சமீபகாலமாக பகிரப்படும் தகவல்களால் அப்பாவிகள் மீதான தாக்குதலும், குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகவும், குறிப்பாக கிராமப்புறங்களில் காணாமல் போகும் குழந்தைகள் நிலை குறிந்த தகவல் தெரிவதே இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினார்.
2016-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிகமான குற்றங்கள், குழந்தைகள் கடத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் மற்றும், சிறுவர் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


