மும்பையில் ரயில் நிலைய பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் காயம்
மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.


மும்பை: மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலைய நடைபாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள அந்தேரி நகரில் பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையமான அந்தேரி ரயில் நிலையத்தை ஒட்டி அந்தேரி மேற்கு மற்றும் அந்தேரி கிழக்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில்வே நடைபாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடைபாலம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தேசிய மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா? என சோதித்து வருவதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நடைபாலத்தின் இடிபாடுகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளதால், மின் கம்பிகள் அறுந்துள்ளதால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசைகளில் செல்லும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், காலையில் பணிக்கும் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், நகரின் தாழ்வான சில பகுதிகளும் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் சில இடங்களில் 110 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ரயில்வே நடைபாலம் இடிந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...