இந்த நிலையில் புதுச்சேரியில் அண்மையில் நடந்துமுடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்,காரைக்காலில் நிகழாண்டு மலர் கண்காட்சி நடத்தப்படுமென்ற அறிவிப்பு செய்யப்பட்டது. இது தோட்டக் கலை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகம், ஆந்திரம், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வகை வகையான மலர் செடிகள் துறை சார்பில் கொண்டுவரப்படும்போது, பொதுமக்கள் எளிதில் வாங்கி வீட்டில் வளர்த்துவருவர். இந்த நிலையில், புதுச்சேரி அரசு இப்போதுதான அறிவிப்பு செய்துள்ளது. இது கோடைக் காலமென்பதால், காரைக்கால் தட்பவெப்ப சூழலுக்கு கண்காட்சி நடத்துவது உகந்ததாக இருக்காது என வேளாண் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இது தோட்டக் கலை ஆர்வலர்களை வேதனைப்படுத்தியுள்ளது.