பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புதிய தமிழகம் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கரன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:58 am

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கரன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து  ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில்,  ஸ்ரீவைகுண்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்ற சிபிசிஐடி போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய தமிழகம் நகரச் செயலர் பாஸ்கரன் கொலை வழக்கில் சுரேஷுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.