சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் 2674 பேர் தற்செயல் விடுப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 2674 பேர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:28 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 2674 பேர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்பட்டன.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் சங்கங்களை அவ்வப்போது அழைத்து பேசுவோம் எனவும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆனநிலையிலும் ஒருமுறை கூட அரசு ஊழியர் சங்க அமைப்புகளை அழைத்து பேசவில்லை. இதனால், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், கருணை அடிப்படை பணிநியமன பிரச்னைகளுக்கு தீர்வு உருவாக்குதல், மருத்துவகாப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைதல், மத்திய அரசுக்கு இணையான படிகள் வழங்குதல், 50 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 3500 பேர் உள்ளனர். அதில், 1059 பெண் ஊழியர்கள் உள்பட 2674 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.