சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசைசௌந்தராஜன்

விருதுநகரில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் செவ்வாய்கிழமை மாலையில் நடைபெறும் பஜனை, தியான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்தார். அவரை விருதுநகர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

எஸ். பாண்டியன்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.கவின்  மாநில செயலாளர் தமிழிசைசௌந்தராஜன் தெரிவித்தார்.

விருதுநகரில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் செவ்வாய்கிழமை மாலையில் நடைபெறும் பஜனை, தியான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்தார். அவரை விருதுநகர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்றனர்.அதையடுத்து, பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசைசௌந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தர்மபுரி-ஓகேனக்கல் நோக்கிச் சென்ற அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர்களுக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். எனவே  காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தேவையான தகவல்களை சிறப்பு அலுவலர்கள் மூலம் தெரிவி்ககவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது, ஆளுங்கட்சியின் கவனம் எல்லாம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலேயே இருக்கிறது. அங்கு 27 அமைச்சர்கள் குழுவினர் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தொகுதியில் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது தொடர்பாக 2 நாள்களுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் அனைவரும் கலந்தாய்வு செய்யப்படும். அதன் அடிப்படையிலேயே வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும். எனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் திமுக-அதிமுகவிற்கு மாற்றாக பா.ஜ.க வளர்ந்து வருகிறது. அதற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.