விருதுநகரில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் செவ்வாய்கிழமை மாலையில் நடைபெறும் பஜனை, தியான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்தார். அவரை விருதுநகர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்றனர்.அதையடுத்து, பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசைசௌந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தர்மபுரி-ஓகேனக்கல் நோக்கிச் சென்ற அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர்களுக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். எனவே காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தேவையான தகவல்களை சிறப்பு அலுவலர்கள் மூலம் தெரிவி்ககவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.