சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிளஸ்2,10ம் வகுப்புகளில் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோருக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ம்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

எஸ். பாண்டியன்

பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோருக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை தக்க வேண்டும். இதற்காக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், வகுப்பறையில் மாணவ, மாணவிகளின் கற்கும் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்க ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த  பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் 2500 பேர்கள் ஒரு பாடம் முதல் 5 பாடங்கள் வரையிலும் தோல்வி அடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற மெல்ல கற்றல் மற்றும் அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு முகாம் ஆமத்தூர் எ.எ.எ பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட இருக்கிறது. இதில், மாணவ, மாணவிகளின் கல்வி திறன் குறித்த தகவல்களை  பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் கல்வியின் எதிர்காலம் அதில் பெற்றோர்களின் பங்கு பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட இருக்கிறது. பொதுத்தேர்வுகள் தொடங்குவதற்கு 40 நாள்களே உள்ள நிலையில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் விடுப்பு இல்லாமல் வருகை தருதல் கட்டாயமாகிறது. அதேபோல், ஆசிரியர் குறிப்பிட்ட பாடங்களையும், வினாத்தாள் புத்தகத்தையும் விடாமல் தொடர்ந்து படித்து பயிற்சி பெறவும் முகாமில் வலியுறுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.