இது தொடர்பான தகவல்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட இருக்கிறது. இதில், மாணவ, மாணவிகளின் கல்வி திறன் குறித்த தகவல்களை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் கல்வியின் எதிர்காலம் அதில் பெற்றோர்களின் பங்கு பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட இருக்கிறது. பொதுத்தேர்வுகள் தொடங்குவதற்கு 40 நாள்களே உள்ள நிலையில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் விடுப்பு இல்லாமல் வருகை தருதல் கட்டாயமாகிறது. அதேபோல், ஆசிரியர் குறிப்பிட்ட பாடங்களையும், வினாத்தாள் புத்தகத்தையும் விடாமல் தொடர்ந்து படித்து பயிற்சி பெறவும் முகாமில் வலியுறுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.