சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் அருகே உள்ள மாத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றேர்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள மாத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று வருவதற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் சாலை, பாலம் வேலைகள் நடந்து வருவதைக் காரணமாக காட்டி கடந்த 3 மாதமாக பேருந்து கிராமத்திற்குள் வராமல் சூலக்கரையோடு திரும்பிச் சென்று விடுகிறதாம். இதனால்,பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 2 கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று அதையடுத்து பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலையுள்ளது.

தற்போது, பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் இந்த வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.