கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சாதனங்கள் கொண்டோ, கடுமையாகவோ, உடலுறுப்புகள் சேதமடையும் வகையிலோ பள்ளி ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்ற சரத்துகள் உள்ளன. ஆனால் தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர் சரியான முறையில் படிக்கவில்லையென ஆசிரியர் தாக்கினால்கூட சில பெற்றோர் ஏற்றுக்கொள்வர். சொந்த நிதியைக் கொண்டு ஆண்டு விழா நடத்தவேண்டிய சூழலில், மாணவர்களிடம் பெரு நகரங்களுக்கு இணையாக கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து நடத்துவதென்பது ஏற்புடையது கிடையாது. இருந்தபோதிலும், கட்டணத்தை தராமல் காலம் தாழ்த்தியதற்காக, பிரம்பால் சிறார்களை அடித்து, காயப்படுத்தியது குற்றச் செயலாகும்.