பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தூத்துக்குடியில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையாளர் கைது

தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக வேலைபார்த்து வருபவர் சுபா.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:09 am

தி. இன்பராஜ்

தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக வேலைபார்த்து வருபவர் சுபா.

இவர், அற்புதராஜ் என்பவரிடம் கூட்டுப்பட்டா வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து, அற்புதராஜ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த நில அளவையைர் சுபாவிடம் புதன்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அற்புதராஜ் வழங்கியபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நில அளவையர் சுபாவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.