கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அருப்புக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). இவர் கடந்த 21.10.2011 அன்று இக்கிராமத்தில் திருவிழா நடந்துள்ளது. அப்போது, இவரது

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:51 am

எஸ். பாண்டியன்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள்  சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி பத்மா தீர்ப்பு வழங்கினார். 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). இவர் கடந்த 21.10.2011 அன்று இக்கிராமத்தில் திருவிழா நடந்துள்ளது. அப்போது, இவரது நெருங்கிய உறவினரின் மகளான 4 வயது சிறுமியை வீட்டிலிருந்து மிட்டாய் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றாராம். பின்னர் அக்கிராமத்தின் பாலப்பகுதியின் மறைவிடத்திற்கு கூட்டிச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது தொடர்பாக பெற்றோர்களிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். இந்த நிலையில் பெற்றோர்களிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளது. இதையடுத்து திருச்சுழி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி(பொறுப்பு) பத்மா சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக கணேசனுக்கு 10 ஆண்டுகளும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 4 ஆண்டுகளும் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, போலீஸார் பாதுகாப்புடன் கணேசனை அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.