இதேபோல், விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் உள்ள கடையில் வைத்திருந்த 27 லிட்டர் பாட்டில்களையும், ஆமத்தூர்-நாட்டார்மங்கலம் சாலையில் தனியார் மெடிக்கல் மருந்துக் கடையில் 2 அரை லிட்டர் பாட்டில்களையும், சூலக்கரை வி.ஓ.சி நகர் கடையில் 3 லிட்டர் பாட்டில்களையும், அருப்புக்கோட்டை சாலையில் 3 லிட்டரும் என மொத்தம் 35 லிட்டர் பாட்டில்களை போலீஸார் சோதனை செய்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த மகேந்திரன்(38), ஆமத்தூர் சின்னத்தாய்(33), வி.ஓ.சி.நகரைச் சேர்ந்த கார்த்தீஸ்வரி(31) மற்றும் இன்பராஜ் உள்ளிட்ட 5 பேரை அந்தந்த பகுதி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.