அதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் பீரோவையும் உடைத்து உள்ளேயிருந்த 5 சவரன் தாலி சங்கிலி, 9 சவரன் சங்கிலி மற்றும் சில்லரை பொருள்கள் என மொத்தம் 15 சவரன் நகையை காணாமல் போயிருந்தது. யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தான் கடைக்குச் சென்ற நேரத்தை சாதகமாக பயன்படுத்தி திருடிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பாக மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோருடன் விரைந்து வந்து சோதனை செய்தனர். இது குறித்து பாண்டி சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து 15 நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.