அதனால், இக்கிராமங்களுக்குச் இடையே செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறையினருக்கு கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் சாலையை சீரமைக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீஸார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சாலை அமைக்கப்படும் என உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலைந்து சென்றனர்.