கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாகயுள்ள 24 பதவிகளுக்கு நாளை வாக்கு பதிவு

தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு 18-ம் தேதி  தேர்தல் வாக்கு பதிவு அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 98

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:47 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு பதிவு  நாளை(வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு 18-ம் தேதி  தேர்தல் வாக்கு பதிவு அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 98 பதவிகளில், 74 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13-வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினர், திருச்சுழி ஒன்றியத்தி்ல் 11-வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினர், சிவகாசி ஒன்றியம் 8-வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

அதேபோல், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தி்ல் நதிக்குடி, சாத்தூர் ஒன்றியத்தில் வெங்கடேஸ்வரபுரம், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் காடனேரி மற்றும் கீழக்கோபாலபுரம் ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சிகளில் உள்ள 14-வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும், விருதுநகர் நகராட்சியில் காலியாக உள்ள 10,21,34 ஆகிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலுக்காக 3 வட்டார ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 40 வாக்குச்சாவடிகளும், 14 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 14 வாக்குச் சாவடிகளும், 4 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 13 வாக்குச்சாவடிகளும், நகராட்சி உறுப்பினர் வார்டு பதவிகளுக்கு 4 வாக்குச் சாவடிகளும் என 71 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரமும், வட்டார ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வாக்குப் பதிவு சீட்டு அடிப்படையிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் பணியில் 284 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் மொத்தம் ஆண்கள்-12911, பெண்கள்-13314, திருநங்கை-1 என மொத்தம் 26,226 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

அதேபோல், வாக்கு பதிவு முடிந்ததும் வாக்கு பதிவு இயந்திரங்கள் நகராட்சியிலும், அதேபோல், வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பதிவான வாக்கு பெட்டிகள் அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட இருக்கிறது.இத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளான வாக்கு பதிவு பெட்டிகள், சீட்டுக்கள் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஆகியவை வாக்கு சாவடி மையங்களுக்கு பாதுகாப்பான முறையில் வாகனங்களில் எடுத்துச் சென்றனர். மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் ஆகியோர்களின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ மூலம் கண்காணிக்கப்பட இருக்கிறது. பதற்றம் ஏற்படும் வாக்குச் சாவடிகளில் கூடுதலாக போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வாக்குப் பதிவின் போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்காக வாக்குப் பதிவு நடைபெற இருக்கிற பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள், தனியார் கிளப்கள் நடத்தும் மதுபானக் கடைகள் ஆகியவைகளை புதன்கிழமை மாலை 5 மணி முதல், வியாழக்கிழமை மாலை 5 மணி வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியருமான டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.