மேலும், பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் தேவை என தெரிவித்தார்களாம். இதையடுத்து இருவரிடமும் மேற்குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாள்கள் ஆன நிலையிலும் வேலை வாங்கி தராமல் தாமதம் செய்தார்களாம். பின்னர் தான் ஏமாற்றப்படுவதை அறிந்து கொண்ட செல்வமும், அவரது தந்தையும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதற்கு, அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என தகாத வார்த்தைகள் பேசியும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியும் உள்ளனர்.