இந்நிகழ்ச்சிக்கு செல்கிறவர்களின் வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்காக விருதுநகர் மாவட்டத்தில் அழகாபுரி, கா.விலக்கு, ராமலிங்காபுரம், திருத்தங்கல், சாத்தூர், என்.ஜி.ஓ.காலனி, ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி, பந்தல்குடி மற்றும் ஆவியூர் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் கணிப்பொறி வசதியுடன், வெப்கேமரா பொறுத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட இருக்கிறது.இச்சாவடிகளில் காவல் ஆய்வாளர் தலைமையில் உள்ள போலீஸார்கள் தனி வாகனமா, வாடகை வாகனமா என சந்தேகம் ஏற்பட்டால் உடனே வட்டார போக்குவரத்து துறை மூலம் ஆன்லைனில் பதிவு எண் மற்றும் உரிமையாளர் விவரங்கள் அனைத்தையும் உடனே சரிபாக்கப்படும். அதேபோல், விதிமுறை மீறும் வாகனங்களின் விவரங்களை உடனே கேமராவில் பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.