எக்காரணம் கொண்டும் காவல் துறை குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் குருபூஜை விழாவிற்கு சென்று திரும்ப வேண்டும். மேலும், வழித்தடம் மாறிச் சென்றால் அந்த வாகனம் காவல் துறையால் பறிமுதல் செய்து அதில் பயணம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வந்திதாபாண்டே, நேர்முக உதவியாளர் கொங்கன், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.