அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானது

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி சேசம்மாள்(50). இவர் பாண்டியன் நகரில் உள்ள தனியார் நல்லெண்ணைய் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தொழிற்சாலையில் வேலை செய்து கொணடிருந்த போது இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் இடது கை துண்டானது.

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி சேசம்மாள்(50). இவர் பாண்டியன் நகரில் உள்ள தனியார் நல்லெண்ணைய் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் திங்கள்கிழமை மாலையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாரத விதமாக சேலை இயந்திரத்தில் சிக்கியது. அதை எடுப்பதற்காக முயற்சிக்கும் போது அவரது இடது கை இயந்திர பாகத்தில் சிக்கி துண்டானது.

உடனே அருகில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தற்போது, இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.