அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அருகே சாலைப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பாவாலி கிராம ஊராட்சி. இக்கிராமத்தில் நடுத்தெருவில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதேபோல், இருபுறமும் கழிவு நீர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சாலைப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பாவாலி கிராம ஊராட்சி. இக்கிராமத்தில் நடுத்தெருவில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதேபோல், இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் வசதியில்லாத நிலையிருக்கிறது. இதனால் மழைநீர் தேங்கி கொசுக்கள் தொல்லையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு முறை கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் விருதுநகர்-அழகாபுரி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சம்பவம் அறிந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் ஊராட்சித் தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில்,விரைவில் சாலை சீரமைக்கவும், கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அந்த சாலையில் காலை நேரம் என்பதால் போக்குவரத்து எதுவும் வராததால் பாதிப்பு எதுவும் இல்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.