இது குறித்து விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியைச் சேர்ந்த பழையூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்த ஊராட்சியில் உள்ள பழையூர் மாரியம்மன் கோயில் தெருவில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள். இங்கு கழிவுநீர் வாய்க்கால், சுகாதார வளாகம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனி கழிப்பறை வளாகம் அமைத்து தரவும் மறுக்கின்றனர்.