அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

நியாய விலைக்கடையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே கூட்டுறவு நியாய விலைக்கடையில் எடையாளர் பணி வாங்கித் தருவதாக கூறி தீப்பெட்டி தொழிலாளியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த 2 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:26 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கூட்டுறவு நியாய விலைக்கடையில் எடையாளர் பணி வாங்கித் தருவதாக கூறி தீப்பெட்டி தொழிலாளியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த 2 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் நடராஜன்(30). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திருமங்கலம் அருகே பொட்டல்பட்டியைச் சேர்ந்த இவரது மனைவிக்கு கூட்டுறவு நியாய விலைக்கடையில் எடையாளர் பணி வாங்கித் தருவதாக கூறி, சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(32), இருக்கன்குடியைச் சேர்ந்த பாண்டியராஜ்(31) ஆகியோர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நடராஜை அணுகினார்களாம்.

அதோடு, இதற்கு குறிப்பிட்ட அளவு பணம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர். இதை உண்மையென நம்பிய நடராஜ் முதல் கட்டமாக ரூ.70 ஆயிரம் பணத்தை இருவரிடமும் அளித்தாராம். எனவே குறிப்பிட்ட நாள்களுக்குள் வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்து வந்தனாராம். மேலும், பணத்தை திருப்பிக் கேட்டதற்கு திருப்பித் தர மறுத்ததோடு இனிமேல் தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம்.

இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் நடராஜன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சுப்பிரமணி, பாண்டியராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.